உன் நினைவே என் சுவாசமடி 11-15

உன் நினைவே என் சுவாசமடி 11-15

அத்தியாயம்-11

ஜெபா உள்ள வரும்போது அவள் நல்ல தூக்கத்தில். அருகில் அமர்ந்து அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

கை இல்லாத நைட் ட்ரஸ் அவ்வளவு அழகா இருந்தது. அவளைத்தொடப் போக

மனசு எச்சரிக்கை செய்தது இப்போ தொட்ட மவனே செத்த. ஆனாலும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன்,

எல்லாருக்கிட்டயும் பொருத்து போறது,

நம்மகிட்ட மட்டும் எகிறி குதிக்கறது. இந்த பொண்டாட்டிகளே இப்படித்தான் போல.

மெதுவாக அவள் நெற்றியில் முத்தம் வைத்து படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் அவன் எப்போதும் போல எழும்பி உடற்பயிற்சிக்கென்று சென்றுவிட்டான்.

சமையலுக்கான தீதி வரவும் இவன் வெளியே சென்றான். மோனல் எட்டு மணிக்குத்தான் எழும்பினாள் சமையலறைக்கு சென்று பார்க்க தீதி, அப்படியே அவளிடம் பேசிக்கொண்டு அவனுக்கு டீ போட்டு கொண்டு குடுக்கவும் அவன் அதை தொடக்கூட இல்லை.

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அவளது முகமே காட்டிக்கொடுத்தது.

அப்படியே அறைக்குள் வந்து முடங்கிக்கொண்டாள். அவன் அதை பெருசா எடுத்துக்கவில்லை. இரவில் அவன் வரும்போது அவள் நல்ல நித்திரையில். எப்போதும் போல அவளை ரசித்து முத்தம் ஒன்றை வைத்தவிட்டே தூங்க செல்வான்.

ஒருவாரம் கடந்த நிலையில் படுக்கைக்கு வந்தவன் கையை முழுதும் மூடிக்கொள்ளும் உடையணிந்திருந்தாள்.

வித்தியாசமாகப்பட ஏதேச்சையாக விட்டுவிட்டான்.

அடுத்தநாளும் அவளுடையில் மாற்றம் (இதையெல்லாம் நல்ல கவனி மனைவி என்ன பண்றானு பார்க்காத,மொத்தமா சேர்த்து போலிஸ்காரன் வாங்கப்போறான்). வந்தவன் குளித்து படுக்கைக்கு வரவும் அவளது கையை தொடவும் அவளிடமிருந்து சத்தம் வலியினால் முனங்கினாள் " ஷ்ஷ் ".

சட்டென்று சுதாரித்தவன் மெதுவாக அவளின் உடையின் கை பகுதியை மேலேற்றிப்பார்க்க அப்படியே சிலையானான். அடுத்த கையின் துணியையும் மெதுவாக மேலேற்றிப்பார்க்க அந்த கைகளிலும் அதைபோல காயங்கள். இரு கைகளிலும் கத்தியால் கீறி வைத்திருந்தாள்.அவனிற்கு என்ன இப்படி பண்ணி வச்சிருக்கா. டாக்டர் பாரதி சொன்னது இப்போதுதான் நியபகம் வந்தது.

நெத்தியில் அடித்துக்கொண்டான் அவ தான் தெரியாம பேசினா நம்ம மன்னிச்சிருக்கலாம் என இப்போது நினைத்தான். சும்மாவே மனசுல இருக்கறத சொல்ல மாட்டா இதுல நாவேற இப்படி இருந்திருக்கனே.

போலிஸ்காரன் கண்களில் கண்ணீர் வடிந்து அவள் கைகளில் விழுந்தது மெதுவாக அசைந்தவளின் கை அவனிடம் இருக்க தூக்கத்தில் இழுத்துப்பார்த்தவளின் கை வலி எடுக்க விழித்து பார்க்க ஜெபா,பதறி எழும்பியவள்,அவனைத்தான் பார்த்தாள் தப்பு செய்த சிறுபிள்ளைபோல கண்களை உருட்டிக்கொண்டிருந்தாள்.

அவன் அவளின் கைகளை கண்களால் காட்டி என்ன என வினவ தலைகுனிந்து கொண்டாள்.பார்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வந்தவன் கைகளில் லேசாக மருந்திட்டவாறே சாயங்காலம் வெளிய போயிருந்தியா எனக் கேட்க. வண்டி ட்ரைவர் சொல்லியிருந்தான் மேடம வழியில பார்த்தேன் என.

எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்.

" என்ன வாங்கப்போன "

" ஒன்னுமில்லை "

இப்போதான் அவனுக்கு சந்தேகம். சிறிது யோசித்தவன் பேக் எடுத்திட்டுவா

மெதுவா பயந்து பயந்து போனவள் பேக் எடுத்து அவன் கையில் கொடுக்க

அவன் சோதித்ததில் மெடிக்கலில் வாங்கிய ஒரு பாட்டில். என்னவென்று பார்க்க அது தூக்க மாத்திரை "

"ச்சப் "ஒரு சத்தம் அடிவாங்கியவள் கட்டிலில் சுருண்டு கிடந்தாள் ஒரிஜினல் போலிஸ் அடி.

ஒன்றுமே சொல்லாமல் எழும்பி சென்றவன் தண்ணீர் எடுத்து வந்து அருகில் வைத்துவிட்டு.

ஜெபா அவளை எழுப்பி " எதுக்கு இந்த மாத்திரை இந்த கைய கிளிச்சிக்கறது எல்லாம் செய்த "

எனக் கேட்டு பதில் வந்தே ஆகனும் என்ற தோரணையில் அமர்ந்து இருந்தான்.

மோனல் கன்னத்தில் கைவைத்து ஏங்கி ஏங்கி அழவும் அழுதிட்டே " நீங்கதான உங்களவிட்டு போகச்சொன்னீங்க ,நான் வேண்டாம்ல ஊங்களுக்கு அதுதான் "

அதைக்கேட்டு ஒன்றுமே சொல்லாமல் அந்த மாத்திரையை இரண்டாக பிரித்து வைத்தவன் ஒரு பகுதியை எடுத்து. நான் பேசனதுக்கு நீ இப்படி செய்தா. நீ பேசனதுக்கு நான் என்ன செய்யனும்.

" என் பொண்டாட்டி என்ன கொலைகாரன்னு சொல்லிட்டா அதனால எனக்கு வாழ பிடிக்கல " என சட்டென்று அந்த மாத்திரைகளை மொத்தமாக வாயில் போட்டுக்கொண்டான்.

அவ்வளவுதான் பாய்ந்து வந்து அவனது வாயை திறக்க முயற்சி செய்தாள். அவன் வாயை இறுக மூடியிருந்தான். அவனின் பலத்திற்கு முன்னால் பூவையவள் ஒன்றுமே செய்யமுடியாமல்

" தெரியாம செய்திட்டேன் மச்சான் வெளிய துப்புங்க என்ன மன்னிச்சிடுங்க என கதறி அழுதவள் அவன் கன்னத்தில் சட்சட்டென்று அடித்து வெளிய துப்புங்க , வெளிய துப்புங்க, ப்ளீஸ் என கையெடுத்துக் கும்பிடவும் "

அதைப்பார்த்து வெளியே மாத்திரைகளை துப்பியவன் வாயைக்கழுவி வரவும் அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.

அவன் அசையவே இல்லை.

" இனி சத்தியமா இப்படிலாம் பண்ணமாட்டேன் ,யோசிக்க மாட்டேன் "

ஜெபா " பிச்சிருவேன் இந்த எண்ணம் இன்னையோட போகட்டும். பெரிய இவா என்கிட்ட ஈகோ பாக்குற ஏன் கோபமா இருந்தா சமாதனம் படுத்த மாட்டியோ. நீ தானடி என்ன கொலைகாரன்னு சொல்லித் தள்ளி வச்ச நானா பேசினேன் "

நான் நாலுபேர காப்பாத்துர போஸ்டுடிங்க்ல இருக்கேன் என் பொண்டாட்டி தற்கொலை பண்ற அளவுக்கு போற. இதவிடக் கேவலம் எனக்கு என்ன இருக்கு. அதவிடு நீ போனதுக்கு பிறகு எனக்கு என்னடி வாழ்க்கை. படிச்சவத நீ நாலு பேருக்கு படிப்பு சொல்லித் தர்ற. அறிவில்ல மூளைய கடன் கொடுத்திட்டியா.

ஒன்னு பண்ணு இனி இப்படி என்ன வாங்கினாலும் எனக்கும் சேர்த்து வாங்கிறு சரியா

" சத்தியாமா இனி இப்படி பண்ணமாட்டேன் "

அவனுக்கே அவள அடிச்சது கஷ்டமா இருந்திச்சி ஒரு அடிக்கே சுருண்டு விழுந்திட்டா.

அவளை அருகே அழைக்கவும் அவனிடம் வந்து ஒட்டிக்கொண்டாள்.

மெதுவா கன்னத்தை தடவிக்கொடுத்தவன் " வலிக்குதாடா ".

" ம்ம் " என் தலையசைத்தவள் அவன் மார்போடு ஒன்டிக்கொண்டாள்.

சிறிது நேரம் அமைதியாக கழிந்தது.

ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து கன்னத்தில் ஒத்தடம் கொடுத்து துடைத்து விட்டவன்.

பார்த்துக் கொண்டிருந்தவள்,அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் அவன்

முகம் முழுவதையும் முத்தத்தால் அர்ச்சித்தாள்.

அவளோடு படுக்கையில் சரிந்தவன்

அவள் முத்தத்தை சுகமாக வாங்கிக் கொண்டிருந்தான்.

அவள் விடுவதாக இல்லை அவன் நெஞ்சில் ஏறி படுத்துக்கொண்டு அவன் உதடுகளை கடித்து வைத்தாள்.

" வலிக்குதுடி ,என்னடி டாலி குரங்கு சேட்டையெல்லாம் பண்ற " எனக்கேட்டு லேசாக உதடுவிரிய சிரிக்கவும்.

மோனல்" ம்ம் இந்த வாய்தான என்ன வேண்டாம் போனு சொல்லுச்சி அதான் என இன்னும் அவன் வாயோடு தன் வாயை பூட்டி சுகமான தண்டனை கொடுத்தாள் அவனுக்கு "

மெதுவாக அவளை விலக்கியவன் தூங்கு கை வலிக்கும் வா என அவளை கீழேத்தள்ள முயற்ச்சிக்க. ம்ஹூம் மாட்டேன் என அவன் மேலயே படுத்துக்

கொண்டாள்.

அவன் அவளை அப்படியே கட்டிப்பிடித்து தூங்க முற்பட அவள் தூங்கமல் அசைந்துக் கொண்டு இருக்கவும்.

அவனுக்குப்புரிந்தது அவள் இப்போதைக்கு தூங்கப்போவதில்லை என.

மறுபடியுமாக அவளை தன்னிடமிருந்து பிரித்து கட்டிலில் தள்ளியவன் அவள் கண்களைத்தான் பார்த்திருந்தான்.

இருவரும் எதிர்ரெதிரே படுத்து அவன் அவளின் கண்களைப் பார்க்க அவள் அவனின் கண்களைப் பார்க்க என இருக்கவும்.

அவள் கண்களில் தன் காதலனுக்கான அழைப்பை படித்தவன் சிறிது நகர்ந்து அவளது இடையில் தன் கையை கொடுத்து அருகே இழுக்கவும் வெற்றிடையில் அவன் கரம்படவும் கூச்சம் கொண்டவள் மெதுவாக அசையவும் அவனுக்கு அது தூண்டுதலாக இருக்க கரத்தினை ஆடைக்குள்ளாகவே அப்படியே மேலே நகர்த்தவும் பெண்ணவள் தன் உடலை எக்கி மூச்சை உள்ளிழுத்தாள்.

அவன் கரம் ஊர்ந்து சென்ற இடமெல்லாம் பெண்ணவளுக்கு உயிருக்குள் பூ பூக்க கிறங்கி,கண்களை மெதுவாக மூடி தன் பற்களைக் கொண்டு உதடு கடித்தாள்.

இதை பார்த்தவன் இன்னும் தன் கரங்களை மேலற்றி அவள் பெண்மையை பற்றியிருந்தான் சட்டென அவன் கரங்களில் மேலே தன் கரங்களை வைத்து அவனைப் பார்க்க அவன் இன்னும் அழுத்தம் கொடுக்கவும் அவன் அழுத்தம் தாங்காமல் அவன் தோள்களில் தன் கரம் கொண்டு அழுத்தானாள்.

அதற்குள்ளாக அவள் மேலாடையை முற்றிலும் அவன் அகற்ற, மறைக்க ஒன்றுமில்லாம்ல பெண்ணவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

ஜெபா" டாலி இங்க பாரு "என அழைக்க

அவளும் கண் திறந்துப் பார்க்க அவன் அவளது இளமையை தனது கண்களாலே தின்றுக் கொண்டிருந்தான்

இப்போது அவளது கரங்களால் அவன் கண்களை மூட.

ஹாஹாஹா என சத்தமா சிரித்து வைத்தான்.

அவள் அங்கங்கள் அவனது உணவாகியது அவளது மேனியெங்கும் தன் உதடுக்கொண்டு ஒத்தடம் கொடுக்க,

இழைந்து குழைந்துப்போனாள் அவனிடம்.

மோனல் இப்போது அவன் கரங்களின் விளையாட்டினால் சிவந்துபோனாள்.

தன் இளமை பசியை தீர்க்க பட்டினி கிடந்த நாட்களுக்கும் சேர்த்து அவளை ஆண்டுக் கொண்டிருந்தான்.

அவள் கால்களோடு தன் கால்களை பின்னி பிணைத்து தன் ஆண்மையால் பெண்மையை அறிந்துக்கொண்டிருந்தவன் தன் வேகமெடுக்க பெண்ணவள் தாளாது அவன் கேசத்தை பிடித்துகொள்ளவும்

புரிந்தவன் ,தன் வேகத்தை குறைத்து பெண்ணவளின் காதலைப் பெற்று

அவளிடம் கூடிக்கழித்து,

இழைந்திருந்தான் தன் இணையோடு.

அது அவர்களுக்கு முடியா இரவாகிப்போனது. இருவரின் காதலை அறியவும்,உடலை அறியவுமே சரியாக இருந்தது.

பெண்ணவளின் கண்களில் இன்னும் அவனுக்கான மயக்கத்தைக் கண்டவன்

" டாலி வேண்டாம்டி,இன்னும்னா உன் உடம்பு தாங்காது,தூங்கு விடிஞ்சிட்டு பாரு" என்க, அவளோ அதே காதலை கண்களில் தேக்கி அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்பவும் " என்ன பார்வைடி இது. இப்படி பார்க்கதடி உனக்குள்ளவே புதைஞ்சிரனும் போல இருக்கு, என்க அவள் அவனை இரு கரம் நீட்டி அழைக்கவும் ,அவளின் உடையற்ற வெற்று மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

காதலை பரிமாறி காமத்தை வென்ற ஒரு நிறைவானதொரு கூடலாகிப்போனது இருவருக்கும்.

காலை நேரத்தில் ஹாலிங்க் பெல் சத்தம் கேட்டு ஜெபாதான் எழுந்தவன் சென்று பார்க்கவும் சமையலுக்க்கு தீதி வந்திருந்தாள்.

கதவை திறந்துக் கொடுத்து விட்டு வந்து படுத்தவன் தான் திரும்பவும் மணியை பார்க்க மணி பத்தைக் காட்டியது .

தலையில் கைவைத்துக் கொண்டான்.

இவளோட, நம்மள ஆட்டி வைக்கிற வெள்ளை இராட்சசி. என திரும்பி அவளைப் பார்த்தான் அயர்ந்த தூக்கம்.

மெதுவாக எழும்பியவன் ஹீட்டர் எல்லாம் ரெடி பண்ணி வைத்தவன் அவளை எழுப்பி ஒன்றாக குளித்து

வெளிய வந்தனர்

வந்தவன் முதலாவதாக அவளது கைகளில் மருந்திட்டு அவளைத்தான் முறைத்து பார்த்தான்.

இரண்டு கைகளையும் காதில் வைத்து மன்னிப்பு என யாசிக்க பெருமூச்சு விட்டவன்.

" உன் பக்கத்துலயே எப்பவும் நீ என்ன பண்ற ஏது பண்றனு கண்கானிக்க முடியாது என் வேலை அப்படி புரிஞ்சிக்கோ. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கே தெரியும். இனி இப்படி எதுவும் வேண்டாத எண்ணங்கள் உனக்கு வராதுன்னு நம்பி வேலைக்கு போகலாமா எப்படி "

மோனல்" ம்ம். இனி எதுவும் தப்பா யோசிக்க மாட்டேன்,செய்யவும் மாட்டேன் "

" உன்ன பார்த்து பார்த்து லவ் பண்ணி இப்படி அதிரடியா கல்யாணம் செய்தது உன்ன கஷ்ட்படுத்த இல்ல. உன் கடைசி மூச்சு வரைக்கும் உன்கூட வாழ்றதுக்கு.

என்ன பாதியில விட்டுப்போகமாட்டனு நம்பலாமா "

இப்போது அவனை கட்டிப்பிடத்து கண்கள் கலங்கி " அபபடியெல்லாம் உன்ன விட்டுப்போக மாட்டேன்.நீ வேண்டாம்னு சொன்னாலும் உன்கூட வாழ்ந்து உன்ன இம்சை பண்ணிட்டே இருப்பேன். என சொல்லி அவன் தலையை பிடித்து குனிய வைத்து அவன் முகமெங்கும் ஈரப்படுத்த,அவன் உதடுகளை தன் இதழால் சிறைப்பிடித்தாள்.

மெதுவாக அவளை விடுவித்து ட்யூட்டிக்கு கிளம்பினான் வேலைக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தான் .

அவளுக்கு இப்போது சமையலில் பரிசோதனை செய்வதே முழு நேர வேலை. இரண்டு சோதனை எலிகள் ஒன்னு ஜெபா இன்னொன்று ,சமையல்கார தீதி.

ஜெபா ஒரு நாள் அழைத்து " தயவு செய்து சமையல் பண்ணாத முடியலடி இரண்டு கிலோ வெயிட் குறைஞ்சிட்டேன் உன்னால "என்க.

அவளின் முகம் வாடியது. ரெம்ப செய்யாத கொஞ்சம் கொஞ்சமா செய்து படி என சொல்ல. இப்போ சமையலும்

இல்லாம சும்மாவே எவ்வளவு நேரம் இருக்க.

ஜெபாவிடம் கேட்டாள் வேலைக்கு போகவா .அங்க இருந்து கூப்பிடுறாங்க

திரும்பவும் வேலைக்கு போகவா என கேட்கவும் சம்மதித்திருந்தான்.

காலேஜ்க்கு நேரடியாக போய் பார்த்து அவளது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கேட்டு வேலைக்கு அனுப்பியிருந்தான்.

இப்படியாக அவள் மறுபடியும் இங்கு வந்து கிட்டதட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் எழும்பி வேலைக்கு போக ரெடியாகி வந்தவள் அப்படியே பின்பக்கமாக சரிய இவளைக் கவனித்திருந்தவன், அவள் தடுமாறவும் கவனித்து பிடித்திருந்தான்.

அவளை உட்கார வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன் " சாப்பிட்டு போ என உணவை ஊட்ட .க்கும் அது தொண்டக்குழியில் நின்று ஆட்டம் காமிக்க வாந்தி எடுத்தவள் ,லீவு சொல்லி கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

பெண்ணவளின் உடலின் மாற்றாம் அவளுக்கும் தெரியவில்லை சொல்லித் தருவதற்கு தாயும் இல்லை. சுற்றம் பார்த்து புரிந்துக்கொள்ள அதுவும் அவளுக்கு இல்லை.

இப்படியே நான்கைந்து நாள் சென்றிருக்க ஜெபாதான்." டாலி வா ஆஸ்பத்திரிக்கு போவோம் " என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தான்.

அங்கு சென்று செக்கப் முடித்து ரிசல்ட் வந்ததும் ஜெபாவிற்கு மகிழ்ச்சி ஆனால் மோனலுக்கோ சந்தோசத்தையும் மீறிய ஒரு அதிர்ச்சி..

அத்தியாயம்-12

ஆஸ்பத்திரியில் டாக்டர்கிட்ட செல்லும்போதே அவளுக்கு பயம் வேற எதாவது பெரிய நோய் இருக்கு என சொல்லிடுவாங்களோ அப்படி என.

ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று அமர்ந்து காத்திருந்தனர் அவர்களின் நேரம் வரவும் அறைக்குள் செல்லவும் டாக்டருக்கு அவனை அடையாளந் தெரிந்து சிரித்தவர் விவரத்தை கேட்ட உடனே புரிந்துக் கொண்டு ,கல்யாணம் எப்போ நடந்தது லாஸ்ட் ப்ரீயட்ஸ் தியதி போன்ற விவரங்களை எல்லாம் அவளிடம் கேட்கவும் ஜெபாவிற்கு அந்த மூளை இப்போது நல்ல பிரகாசமா எரிந்தது.

அவன் உறுதி செய்துவிட்டான்.

அவள் எதையும் உணராமல் மருத்தவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவர் ஒரே ஒரு பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்துவிட்டு,பரிசோதனை செய்து வரச்சொன்னார்.

டெஸ்ட் எல்லாம் கொடுத்து முடிவிற்காக காத்திருக்க. ஜெபாவிற்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை முடிவு எப்போ வருமென்று.

கொஞ்சம் நேரங்கழித்து மருத்தவர் உள்ளே அழைத்து ஜெபாவிடம் மோனலின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட தகவலை சொல்லவும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் உதிரம் தன் வாரிசு, தங்கள் இருவரின் காதலில் திளைத்து ஜெனித்த பிள்ளை சந்தோசத்தில் மோனலைப் பார்க்க அவளது முகம் வித்தியசமாக இருக்கவும், இப்போது எதையும் கேட்க முடியாது என்று

டாக்டரிடம் சிலபல சந்தேகங்களையும்,

அவளுக்கான சாப்பாட்டு முறைகளையும் கேட்டு தெரிந்துக்கொண்டவன் நன்றி சொல்லி வெளியே வந்தனர்.

அவளை தட்டி கூப்பிட்டான் " டாலி, ஏன் அமைதியா இருக்க உனக்கு இதுல சந்தோசமில்லையா. "

மோனல் " ரெம்ப சந்தோசம்,எனக்கென்று ஒரு சொந்தம் என் இரத்தம் வரப்போகுது அதுல சந்தோசம் ஆனா ஆனா "

ஜெபா " ஆனா என்னடா , பயமா இருக்கா, பயப்படாத அம்மாவ இங்க வரச்சொல்லிடலாம் சரியா "

மோனல் " அதில்லை " என எதையோ பேசத்தொடங்க அவனின் சந்தோசத்தை பார்த்து அமைதியாக அவனோட மெதுவாக நடந்தாள்.

அவன் அதுக்குள்ளாக வீட்டிற்கு அழைத்து விசயத்தை தெரிவித்திருந்தான்.

டேக்ஸியில் ஏறி மெதுவாக போகச்சொன்னவன். அவளது கையை பிடித்து தன் கரத்திற்குள் அடக்கிவைத்துக் கொண்டான். அவனின் சந்தோசத்தை பகிர்ந்திக்க வார்த்தையே வரவில்லை.

அப்படியே மோன நிலையிலேயே இருந்தான்.

அவளுக்குத்தான் ரெம்ப கைகால் எல்லாம் நடுங்கியது. சோர்ந்துபோய் அவன் தோளிலே சாய்ந்துக்கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்ததும் தீதியிடம் சொல்லி அவளுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட கொடுத்தான், சாப்பிட்டு சிறிது நேரத்திலயே மறுபடியும் வாந்தி மயக்கம் அவனுக்கு என்ன செய்ய எனத்தெரியவில்லை. அவளிடம் படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னவன் தீதியிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ட்யூட்டிக்கு கிளம்பிவிட்டான்.

அவளுக்குத்தான் மனநிலையில் மாற்றம் என்ன நினைக்கின்றாள் என அவளுக்கே அறுதியில்லை.

சோர்வுல அப்படியே பலதையும் நினைத்து தூங்கிவிட்டாள். பசியும் இல்லை தலைசுத்தல் அவளுக்கு முடியல

இவ்வளவு நாள் இல்லாமல் அவளின் தாயை இன்று அதிகமாக தேடினாள்.

எழும்பி அவளின் பெட்டியில் வைத்திருந்த ஒரு ஆல்பத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே தூங்கியதுதான் அவன் வந்து எழுப்பியதும் தான் தெரியும் ரெம்ப நேரம் தூங்கியிருக்கோம் என.

அப்போதுதான் ஜெபா அவள் கையில் இருக்கும் ஆல்பத்தை பார்த்தான்.

பழைய ஆல்பம் ஆனா அழகாக வடிவமைக்கபட்டிருந்தது.

அதை வாங்கி முதல் பக்கம் பார்க்கவும்

கலர்தான் ஆனால் மங்கியிருந்தது. அதில் மோனலைவிட கலரில் ஒரு பெண்ணும் தமிழ்நாட்டு பையனின் திருமணக்கோலம் அது.

" இதுதான் உங்கப்பா அம்மாவா அழகா இருக்காங்க ஹேய் உங்கப்பா

போலிஸா "

அதைப் பார்த்து ஒவ்வொன்றாக கேள்வி கேட்க அவள்தான் பதில் சொல்லாமல் அமைதியா இருந்தாள்.

" என்னடா ஒரு மாதிரி இருக்க ,சாப்பிடல போல ,பிடிக்கலையா ஜூஸ் எதாவது போட்டுத்தரட்டா என கேட்டுக் கொண்டிருக்க. மெதுவாக வேண்டாம் என தலையசைத்தவள்.

அவன் மடியில் படுத்துக்கொண்டு, அவனின் வயிற்றோடு சேர்த்து கைபோட்டு அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அப்படியே இருந்தவன்.

" டாலி எழும்பு எனக்கு பசிக்குது ,

வா சாப்பிட்டு அப்படியே வெளியபோயி மெதுவா நடந்திட்டு வரலாம் " என அவளையும் எழுப்பி சாப்பிடுறதுக்குள்ள போதும்போதும் என்றாகிவிட்டது.

அவள் சாப்பிடுவதற்குள் இவன் திண்டாடிப்போனான். அரைவயிறு சாப்பிடுறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட்டாள் ஒவ்வொரு வாய் சாப்பாட்டிற்கும் தண்ணி குடித்து தண்ணி குடித்து கஷ்டப்பட்டு சாப்பாட்டை உள்ளே தள்ள ,கடைசியில் வேண்டாம் என வைத்துவிட்டாள்.

எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்தவன்,அவளை அழைத்துக்கொண்டு மெதுவா வெளியே நடந்து செல்லவும்

ஜெபா " நாளைக்கு நம்ம குடும்பம் மொத்தமும் இங்க இருப்பாங்க.

எல்லாரும் உன்னை பார்க்க வர்றாங்க,எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு "

" மச்சான் "

" என்னடி தெருவுல நின்னு இப்படி கூப்பிடுற. வீட்லனா இதுக்கு வேற பரிசு வேற மாதிரி தந்திருப்பேன் " என சிரித்தான் அவனின் சந்தோசம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

மேனல் கண்ணெடுக்காம அவனத்தான் பார்த்திருந்தாள்.

ஜெபா தன் புருவம் இரண்டையும் ஏத்தி இறக்கி என்ன உன் புருசனை இன்னைக்கு ரெம்ப சைட் அடிக்கற டாலி என ஜாலியாக பேசிக்கொண்டே அவளுடன் நடக்கவும்.

அவள் முகம் இன்னும் தெளியாது இருக்க. அவள் கையைப் பிடித்து நிறுத்தி

" உனக்கு பாப்பா "....

அப்படியே பாதியில் வார்த்தைகளே நிறுத்தியவன் தலையை " வேண்டாமா " என்கின்ற ரீதியில் தலையை ஆட்டி அப்படியா எனக் கேட்டான்.

அந்த வார்த்தைகளைக் கூட பிரயோகிக்க அவனுக்கு பிடித்தமில்லை. அவன் கண்களில் சஞ்சலம் எதுவும் தப்பா சொல்லிருவாளோ என்று அதைக் கண்டுகொண்டவள்

அவள் உடனே அவனது வாயை ஒரு கைகளால் மூடி" மறு கையால் தன் வயிற்றினில் கைவைத்து " இந்த பாப்பா எனக்கு கடவுள் கொடுத்தா பரிசு. என்னோட சந்தோசமான வாழ்க்கைக்கு கிடைச்சது. தப்பா எதுவும் யோசிக்கல இது வேற வீட்டுக்கு போயி பேசலாமா கொஞ்சம் " என தன் தலையை சரித்து அவனிடம் கேட்கவும், அவனுக்கு இப்போ நிம்மதி.

காலையில இருந்து பார்த்திட்டிருக்கான் அவளது முகவாடலை அதுதான் கேட்டான்.

இப்போது இன்னும் அதிக சந்தோசத்தோடு நடக்க அங்கிருந்த மரங்களில் இருந்து பூ அப்படியே அவர்கள் நடக்க நடக்க விழுந்தது . வரும்போது இருந்த மனநிலையில் இதைகவனிக்கவில்லை.

இப்போது அதை ஆசைத்தீர ரசித்தவன் ஒரு பூவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வந்தான்.

மோனல் " உங்களுக்கும் பூ பிடிக்குமா "

ஜெபா " என்ன இப்படி கேட்டுட்ட. கல்லூரி நாட்கள்ல மரத்தடிதான் படிக்கறதுக்கு

ஐயா ஒரு இயற்கை ரசிகன் தெரியுமா "

மோனல் " ஐயோ அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் ஒரே ரசனை " என அலுத்துக்கொண்டவள் போல பேச.

ஜெபா " ஆமாடி , அதுதான் உன்ன என்கிட்ட கொண்டு வந்திருக்கு.

அண்ணனும் தங்கச்சிக்கும் உன் மேலதான் ஆசை. அது தான் எங்க வீட்டோட வைச்சிக்க அண்ணனும் தங்கச்சியும் திட்டம் போட்டு உன்ன கொண்டு வந்திட்டோம் " என அவள் கன்னத்தை பிச்சி முத்தம் கொடுத்தவன் " வா வீட்டுக்கு போவோம் நேரமாயிட்டு " என வீட்டிற்கு நடந்தனர். நிறைய பேசினர் பிடிச்சது பிடிக்காதது என்று.

வீட்டிற்கு வந்தவுடன் குடும்பத்தில் அனைவரும் மோனலிடம் போனில் பேசி ஆளாளுக்கு அவளை பத்திரமாக இருக்க சொல்லி அறிவுரைக் கூறவும் விழிப்பிதுங்கினால் இவ்வளவு இருக்கா

என.

இரண்டுபேரும் படுக்கைக்கு வந்ததும்

அவன் அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க அவனின் நெஞ்சத்தில் சாயந்து அவளிருக்க அப்படியே அமைதியாக நேரம் சிறிது கடந்ததும்.

மோனல் எழும்பி சென்று மதியம் அவள் பார்த்திருந்த அந்த ஆல்பத்தை இப்போது எடுத்தவந்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தாள். அவளது அம்மாவிற்கு வலிக்ககூடாது என்று.

ஜெபா " ஹேய், டாலி உங்கம்மாவ நினைச்சி கஷ்டமா இருக்கா விடுடா. அவங்க எப்பவும் உன்ன ஆசிர்வதித்து உன்ன பார்த்திட்டே இருப்பாங்க "

மோனல் " ஆமா உன்மைதான் மச்சான். நம்ம கல்யாணத்திற்கு முந்தின நாள் ரெம்ப அழுதேன். நீங்க இருந்தா இப்படி நிலைமை வந்திருக்குமா என அவங்கிட்டதான் சொல்லி அழுதேன். அதான் நீங்க வந்தீங்கபோல "

ஜெபா " என் மாமியார் அப்பவே என்ன ஆசிர்வாதம் பண்ணிருக்காங்க ம்ம்"

லேசாக சிரித்து" அம்மா ரெம்ப சாஃப்ட்,எல்லாத்தையும் பொருத்துப் போவாங்க. நல்ல சமைப்பாங்க ,ரெம்ப அழகா இருப்பாங்க,எப்பவும் சிரித்த முகமாவே இருப்பாங்க " என பழைய நினைவுகளில் மூழ்கியவள்.

உங்கள எப்படி மச்சான் கூப்பிட்டேன்

தெரியுமா. எங்கம்மா எங்கப்பாவ ஆசையா மச்சானுதான் கூப்பிடுவாங்க.அது என்னோட மனசுல பதிஞ்சிட்டு அதானாலதான் சீக்கிரமா உங்கள மச்சான் என கூப்பிட முடிஞ்சது.

எனக்கு நிறைய பேசனும் உங்ககிட்ட டயர்டா இருந்தா தூங்குங்க இன்னொரு நாள் பேசலாம் என மோனல் சொல்லவும்.

இல்லயில்ல எனக்கு தூக்கம் வரல.

நீ பேசுமா நா கேட்டுக்குறேன். மனசுல என்ன இருந்தாலும் சொல்லிடுடா. அழுத்தம் கொடுக்காத இந்த டைம்ல உன் ஹெல்த்துக்கு நல்லது இல்ல சரியா என அவள் தலையைக் கோதி கொடுக்க.

" மச்சான் ஊர்ல ரிசப்சன் அன்னைக்கு உங்ககிட்ட பேசிட்டு அடிவாங்கினேன்.

ஏன் அடிச்சீங்க. நான் தப்பான பொண்ணு சொன்னத நம்பியா இல்ல .

நான் அப்படிபட்ட பொண்ணு இல்லனு நம்பிக்கையிலையா "

ஜெபா " என்னடா கேள்வி இது என் டாலிய எனக்குத் தெரியாதா.ஒரு வருசமா உன் பின்னாடி அலைஞ்சவனுக்கு உன்னை பத்தி எனக்கு தெரியாதா. உன்னைய நீ அசிங்கப்படுத்திக்கறனு கோவம் அதான் அடிச்சேன் உனக்கே தெரியும் இப்போ ஏன்டா அது "

அதுலதான் இருக்கு வாழ்க்கையே அதான் கேட்டேன்.

" நான் என்னைக்காவது வேற தப்பா பழகி போயிடுவேன்னு மனசுல நினைச்சிருக்கீங்களா "

அவளை சற்று விலக்கிதள்ளி அவள் முகத்தைதான் பார்த்தான். அவள் முகம் அமைதியா சாந்தமா எந்தவித உணர்ச்சியும் இல்லாது இருக்கவும் அவள் முகத்தை இரு கரங்களிலும் தாங்கி " என்னடி இதுஇப்படிலாம் கேள்வி வருது. மனசுல என்னடி வச்சிருக்க.நீ பேசறத பார்த்து எனக்கே லேசா பயம் வருது "

அவள் பதில் எதுவும் கொடுக்காமல்.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.

" சத்தியமா என் மனசுல அப்படி ஒரு சிந்தனையே வந்ததில்ல இனியும்

வராது "

அவனுக்கு இப்போ என்ன சொல்லனு தெரியல " உனக்கு கஷ்டமா இருந்தா எதுவும் சொல்ல வேண்டாம். உன்னோட கடந்தகாலம் எப்படி இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நீ என் மனைவி அதை தாண்டி எனக்கு எதுவும்

வேண்டாம் "

மோனல் அவள் முகத்தை பிடித்திருந்த அவன் கைகளை எடுத்து அதில் முத்தம் வைத்தவள் பேச ஆரம்பித்தாள் " இல்ல மச்சான் இப்பவே சொல்லிடுறேன்.

உங்ககிட்ட சொல்லிடுறேன் என் குடும்பத்தை பத்தி ..ப்ளீஸ் கேளுங்க "

ஜெபா அரைமனதாக தலையாட்டினான்.

" என்னோட அப்பா அம்மா பேரு என்னத் தெரியுமா

சரவணபாண்டியன்- தர்ஷனா.

அவங்க ரெம்ப லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.

காதல்ல ஜெயிச்சவங்க கல்யாணத்துல ரெம்ப ரெம்ப மோசமா தோத்து போயிட்டாங்க.

" மச்சான் காதலுக்கு அடிப்படை என்னனு உங்களுக்கு தெரியுமா.

அழகோ பணமோ உடம்போ இல்லை

நம்பிக்கை

அது அவங்க இரண்டுபேருக்கும் இருந்து இல்லமா போச்சுதா, இல்ல அப்பா மேல அம்மா மட்டும்தான் நம்பிக்கை வச்சாங்களா தெரியாது "

கொஞ்சம் நேர அமைதி பின் மோனல் பேசினால் " நான் எதாவது தப்பு செய்தா என்ன கொல்லத்தோணுமா உங்களுக்கு "

கையைவிட்டவன் அவ மண்டைல லேசா ஒரு கொட்டு கொட்டி " லூசாடி நீ எந்த நேரத்துல என்ன பேசுற. நான் நம்ம பிள்ளை வந்தவுடனே எப்படி வளர்க்கலாம் என கனவு கண்டுட்டு இருக்கேன். எந்த நேரத்துல எப்படி பேசுது பாரு " கொஞ்சம் கடுப்பாயிட்டான்.

" கோவப்படாதிங்க,ஆசை ஆசையா காதலிச்சி கல்யாணம்பண்ணிட்டு

வாழத்தெரியாம, ஒரு பொண்ணுக்கு ஐஞ்சு வயசு இன்னோரு குழந்தை வயித்துல இருக்கும் போது என் கண்ணு முன்னாடியே எங்கப்பா எங்கம்மாவ கொன்னுட்டாரு "

இதைக் கேட்டதும் ஜெபாவிற்கு அதிர்ச்சி.

என்னடி சொல்ற. உங்கப்பா என்ன அவ்வளவு மோசமானவரா எனறு கேட்டான்.

" இல்லை "

மோனல் அவளின் பெற்றோர் மற்றும் அவளின் கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

அத்தியாயம்-13

சுப்பையா பாண்டியனுக்கு பூர்விகம் திருநெல்வேலி மாவட்டம். அவர் பிறக்கும் முன்பே அவரது தாய் தகப்பனார் மும்பைக்கு புலம் பெயர்ந்துவிட்டனர். சுப்பையா பாண்டியன் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். அவரின் தாய் தகப்பன் இருக்கும் வரை ஊருக்கு சென்று வந்தார்.

அதன்பின் அவர் ஊருக்கு சென்றதே இல்லை. சுப்பையா பாண்டியன்- ராசாத்தி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்.

நாயகி,சரவணபாண்டியன்,

ராஜபாண்டியன்.

நாயகி பள்ளிக்கூட படிப்பை பாதியில நிறுத்திவிட்டார். சரவணன் இப்போது கல்லூரி படிப்பை முடித்து போலிஸ் வேலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.

ராஜாபாண்டியன் படிப்பு சரியாக வராததால் சுப்பையாவுடன் உதவி செய்துகொண்டிருந்தான்.

அவர்கள் இருக்கும் ஏரியாவில் கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருப்பதால் கொஞ்சம் பெரியாட்களின் கெத்து உண்டு அவர்களுக்கு. சுத்தி மராத்தியர்கள் இருந்தனர்.

அப்படியான ஒரு மராத்தி குடும்பம்தான் தர்ஷனாவின் குடும்பம். அவங்கப்பா

சாதாரன ஒரு கம்பெனியில் ட்ரைவர் வேலை. அம்மா அப்பளம் உருட்டுவாங்க

இங்க அதற்கென தனி கம்பெனியே இருக்கின்றது. நம்ம தமிழ்நாட்டில் பீடி சுத்தும் தொழில் எப்படியோ அதைப்போல இங்கு அப்பளம் இடுவது.

தர்ஷனாவிற்கும் அப்பொழுது 17 வயதுதான். சரவணனுக்கோ 23 வயது.

அந்த ஏரியாவின் பெரிய மனிதனின் மகன் என்ற தோரனை கருப்பென்றாலும்

தென்னாட்டிற்கே உரிய முகக்கலையும் போலிஸில் சேருவதற்காக உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் , கட்டிளங்காளையான அவனுக்கு பெண் ரசிகர்கள் ஏராளம்.

ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் தர்ஷனாவின் மேல்தான் அவனுக்கு இஷ்டம் தோன்றியது. அவளின் குடும்பம் அவர்களின் சமூகத்து கோவிலில் பூஜை செய்து வருபவர்கள் வழிவழியாக.

சிலகட்டுப்பாடுகள் உண்டு அவர்களுக்கென.

சரவணன் அவளையே சுத்தி சுத்தி வருவான். அவளுக்கு அது தெரியும் தான் ஆனாலும் மனதிற்குள் லேசாக ஆசையிருந்தாலும் அதைக் கண்டு கொள்வதில்லை.

ஒரு நாள் தர்ஷனா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் அவளை மறித்தான் மிரண்ட்டு விழித்தவளின் கண்கள் அவ்வளவு பயத்தைக் காட்டியது. அது அவள் மேல் உள்ள ஆசையை இன்னும் தூண்டியது.

அவன் கையில் இருந்த ஒரு பார்சலை அவளின் கைகளில் திணித்து.

உன்னை ரெம்ப பிடிக்கும் உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும் ரெம்ப ஆசை. உனக்கு சம்மதமா எனக்கேட்க அவள் பயந்து ஓடி வந்துவிட்டாள்.

இரவு ஊரே தூங்கும் வேளையில் அந்த பார்சலை மெதுவாக பிரித்து பார்க்க பச்சை கலர் கண்ணாடி வளையல்.

மராத்திய பெண்கள் விரும்பி அணியும் வளையல். குறிப்பாக கல்யாணம் ஆன பெண்கள் கண்டிப்பாக அணிந்திருப்பர்.

அதை ஆசையாக போட்டுப் போட்டுப் பார்த்தவள் ஓழித்து வைத்துக் கொண்டாள். கள்ளத்தனம் வந்ததெனில்

காதலும் வந்ததென்று அர்த்தமல்லவா.

அதையறியாது பேதைப் பெண்ணும் மயங்கி கனவுகள் காண ஆரம்பித்தாள். ஆனால் இன்னும் அவனிடம் கூறவில்லை.

சரவணன் தர்ஷனா விசயத்தில் மிகவும் தீவிரமாக இருந்தான். அவளின் எல்லாமாக தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான்.

அவனின் அந்த ஏரியா பசங்களுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் இது தெரியும்.

எப்போதும் அப்பளத்திற்கான மாவு வாங்க தர்ஷனா அம்மாதான் செல்வார். அன்று ஏதேச்சையாக அவள் செல்ல நேரிட. காலையில் தன் வீட்டிலிருந்தே இதைக் கவனித்தவன் அவள் பின்னே செல்லவும் கன்னியவள் கண்டுக்கொண்டாள் ,ஓரக்கண்ணால் அவனை பார்த்து பார்த்து சென்றாள். அவளுடன் வந்த சில பெரியவர்களும் செல்வதால் பேச முடியாது தேங்கி நின்றவன் காத்திருக்க திரும்பி வந்தவளை வசமாக வழிமறித்து, கையை பிடித்து மறைவாக இழுத்து செல்லவும் ரெம்ப பயந்து கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு.

(எல்லாமே இந்தியில் பேசுகின்றனர்.சரவணனுக்கு மாரத்தி எழுத படிக்கத்தெரியும் .ஆனால் பேச வராது.அதை தமிழில் கொடுக்கிறேன்)

" ச்ச்ச்..எதுக்கு அழுத அழுகைய நிறுத்து. பிடிச்சிருக்கா பிடிக்கலையா சொல்லிட்டுப்போ என தன் பிடியில் நின்றிருந்தான் "

தர்ஷனா மெதுவாக தலையை மேலும் கீழும் ஆட்டவும். என்ன சொல்ற எனக்கு புரியல, வாயத்திறந்து பதில சொல்லு எனக்கேட்கவும் அவளுக்கே கேட்காதா குரலில் " பிடிச்சிருக்கு " தலையையும் ஆட்டி பதில் சொல்ல அவன் தான் கிறங்கிப்போனான் பெண்ணவளின் மேல் பைத்தியமானான்.

பதிலை சொல்லிவிட்டு தலைகுனிந்து நின்றவளின் கன்னத்தில் சட்டென முத்திரை பதித்து அவளை விடுவித்தவன் போ என்று சொல்ல. எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று தெரியாது .

வீடு வந்து சேர்ந்ததும் அவளின் அம்மா சத்தம்போட்டார். கூடப்போன ஆட்கள் எல்லாம் வந்துவிடவும் இவளைத்தேடி இருந்தார் அதனால்.

இது எதுவும் உணராது அவள் வேறு உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தாள்.

அவன் மீசையின் குறுகுறுப்பு இன்னும் அவள் கன்னத்தில் இருப்பது போன்ற மாயை அவளுக்கு.

மதியம் ஏதோ வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்கவும் தர்ஷனா எட்டிப்பார்க்க அங்க இவளைப்பார்த்து கண்ணடித்து நின்றான் சரவணன். யாரவது பார்த்திரப்போறாங்க என சுற்றும் முற்றும் அவள் பார்க்க அவன் யாருமில்லை என கண் சைகை காமிக்க மயங்கிப்போனாள் அவனிடம்.

தர்ஷனா ரெம்ப அழகுதான் அவங்கவீட்டில் எல்லோரும் அழகுதான். தர்ஷனாவிற்கு பிறகே மூன்று பிள்ளைகள் மொத்தமாக இரண்டு ஆண் குழந்தைகள் இரண்டு பெண்.

அவங்கம்மா ரெம்ப கண்டிப்பு.

பிள்ளைகளை அநாவசியமாக எங்கும் அனுப்பமாட்டர். அதனாலதான் சரவணனுக்கு அவளை வெளியில் பார்க்கும் வாய்ப்புகள் குறைவு.

அவள் வெளியில் வராத நாட்களில் ஒரு

முறையேனும் வீட்டின் அருகில் வந்து பார்த்து செல்வான் வழிப்போக்கனைப் போல.

அவனுக்கு அவளை தினமும் பார்க்கவேண்டும் போல இருந்தது.

அவளிற்கும் இதே நிலை.

காதல் கனவுகளும்,வாலிபக் கனவுகளும் இருவருக்குள்ளும். அந்த பருவத்தில் அது இயற்கையே தன் இணையை தேடத்தான் செய்யும்.

எப்படியாவது சந்தர்ப்பத்தை உருவாக்கி தினமும் ஒரு முறை அவளை பார்த்து செல்வான். இப்படியாக பார்வையால் தங்களது நேசத்தை வளர்த்துக்கொண்டனர்.

திடீரென ஒரு பத்துநாள் போல அவன் வரவில்லை இவளைப்பார்க்க. தவித்து போனவள் மெதுவாக தன் தாய்க்கு தெரியாமல் வெளியே வந்து அவன் வீட்டை நோட்டமிட அங்கிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மனதிற்குள் அழுதே கரைந்தாள்.

பதினைந்து நாள் கழித்தே அவனை அவன் வீட்டருகில் காணவும் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

அவனிடம் ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு வந்து ஒரே அழுகை. இப்படி மாறிப்போயிட்டனே என நினைத்து .

சிறுவயது என்றாலும் வீட்டின சூழ்நிலை அறிந்தே வளர்பவள். அழுகையை நிறுத்தி தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

சாயங்காலம் போல நிறைய பசங்க கையில் நோட்டோடு ஒவ்வொரு வீடு வீடாக வந்து கண்பதிக்கு

( விநாயகர்சதூர்த்திக்கு) வசூல் செய்ய வந்தனர். அவளின் வீட்டின் முன்பு வரவும் சரவணனைக் கண்டவள் கோபத்தில் திரும்பி நின்றுக்கொண்டாள்.

சரவணனின் நண்பன் ஒருவன்

" டேய் சரவணா எங்கடா போயிருந்த ஆளக்காணவே இல்லை " என்று கேட்க.

" எஸ்.ஐ செலக்சன் டெஸ்ட் டா அதான் வரமுடியல. சீக்கிரம் வேலைக்கு சேர்ந்தா தானடா கல்யாணமும் சீக்கிரம் பண்ணமுடியும் " என்று அவளைப் பார்த்தே சொன்னான்.( அவளுக்கு தகவல் சொல்றாங்களாம் )

அதைக்கேட்டதும் தான் அவள் முகத்தில்

புன்னகை அதைப்பார்த்தவாறே அவனும் தலையாட்டி வர்றேன் என சென்றுவிட்டான்.

தொட்டு தொட்டு பக்கம் நின்று பேசமுடியாவிட்டாலும் அவர்களின் பிணைப்பு உறுதியாக நின்றது.

அந்த நேரத்தில்தான் நாயகியின் திருமணம் பெரியளவில் நடந்தது.

தர்ஷனாவின் குடும்பம் அன்றாட ஜீவனம் நடத்தும் நிலைதான். அதனால அவா பெருசா எதுக்கும் ஆசைபட்டதில்லை இந்த காதலைத்தவிர.

கண்பதி நேரத்தில் வீட்டில் பொதுவாக கட்டுப்பாடு பிள்ளைகளுக்கு தளர்ந்திருக்கும் வெளியே செல்வதற்கு.

அதுபோன்றுதான் தர்ஷனாவின் வீட்டிலும். தர்ஷனா தன்னோட சேர்ந்த பிள்ளைங்களோடு நன்கு உடை உடுத்தி

கண்பதி வைத்திருக்கும் இடத்திற்கு வத்தாள். சாமி கும்பிட , சிலை தோற்றுவிடும் அவளின் முன்பு.

அவளைப் பார்த்த சரவணனுக்குத் தான்

கண்ணு இரண்டும் தெறித்துவிழும்படி இருந்தது. ஏரியா பசங்க அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டனர்.

மெதுவாக கண்ணைமுடி நின்றிருந்தவளின் அருகில் நின்று அவனும் கண்ணை மூடி வணங்கி நின்றான்.

தர்ஷனா கண்திறந்து பார்க்க அருகில்

அவன். அவளது முகத்தில் அவனைக்

கண்டதும் பிராகாசம்.

அவளின் காதில் மெதுவாக வெளிய தனியாவா என ரகசியம் பேசிச் சென்றான்.

அவளது கூட்டாளிகளை விடுத்து மெதுவாக அவன் சென்ற திசைக்கு செல்ல மறைவிலிருந்து அவள் கையைப்பிடித்து உள்ளே இழுத்தான்.

எதுக்கு இங்க கூப்டீங்க எல்லாரும் தேடுவாங்க எங்க. சத்தம் போடாத என தன் விரலை உதட்டில் வைத்து அவளுக்கு செய்கைகாமிக்கவும் .

அமைதியானவள் அவனைத்தான் பார்த்தாள்.

" என்ன பார்வை இது " கேட்டு சிரித்தவன் " என்ன புதுசா சேலையெல்லாம் கட்டியிருக்க அழகா இருக்கடி"

தர்ஷனா வெட்கசிரிப்பு சிரிக்கவும்.

அவள் முகத்தை தன் கையில் ஏந்தி அவள் கண்களைத்தான் பார்த்திருந்தான்.

அவனின் மீசை அவளுக்கு ரெம்ப பிடிக்கும் நம்ம தெற்கத்தி ஸ்டைல்ல மீசை வச்சிருப்பான். அவனின் முகத்திற்கு அது அழகை கொடுத்தது.

அந்த மீசையோடு சேர்த்து உதடு விரித்து சிரிக்கும்போது அவ்வளவு அழாக இருக்கும். இப்பவும் அவனின் மீசையை தொட்டுப்பார்க்க அவளின் கரத்தில் முத்தமிட்டான்.

அவள் கையை வெடுக்கென்று எடுக்கவும் இடுப்பை பிடித்துக்கொண்டான். அன்றைக்குத்தான் முதன்முதலில் சேலைக் கட்டியிருந்தவள் பயந்து

" சேலை அவிந்திரும் விடுங்க " என்க.

அவுந்தா மச்சான் கட்டிவிடுறேன்டி. சும்மா நெளியாத எனக்கு ஒரு மாதிரி ஆகுதுடி என சொன்னான் அவள் தேகம் மட்டுமல்ல அவளது இளமையின் செழுமையும் அவன் மேல.

அவன் இறுக்கி பிடிக்கவும் நெளிந்துக்கொடுக்க தேகம் இரண்டும் ஒட்டி உரசிக்கொள்ள தீ பற்றிக்கொண்டது மனதில் மட்டுமல்ல உடலிலும்.

சரவணனுக்கு கிறக்கம்,தர்ஷனாவிற்கு புதுவித மயக்கம் சிறிது நேரம் அப்படியே இருக்க கண்கள் மூடி ,உதடுகள் துடித்திருக்க கண்டவன். துடிக்கும் இதழை தன் உதட்டால் பற்றியிருந்தான். உயிரை பறித்திடும் துடிப்பு அவளிடம் மெல்ல மெல்ல அடக்கியவன் தனது கரத்திற்குள் அடக்கி வைத்திருந்தான்.

பக்கத்தில் சத்தம் கேட்டு அவளை விடுவித்தவன். காதில் ரகசியம் பேசி விடுவித்தவன் சொன்னான். இன்னும் ஒரு மாசத்துல ட்ரைனிங்க் போயிடுவேன் எப்படியும் போஸ்டிங்க் எல்லாம் வந்து செட்டிலாக ஆறுமாசமாயிடும். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா.

உங்க வீட்ல சம்மதிப்பாங்களா. அப்பாவ விட்டு இப்பவே பொண்ணு கேட்டு உறுதி படுத்திப்போமா என்று கேட்டான். அவளும் சந்தோசமாக தலையாட்டினாள்.

" கண்பதி முடியட்டும் " என்று சொல்லி அவளை விடுவிக்க. அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

விநாயகர்சதூர்த்தி பதினோரு நாளும்

முடிந்தது அவர்களது சந்தோசமும் சிறிது நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டது.

சரவணன் அவனது அப்பாவிடம் பேசியிருந்தான். தர்ஷனா வீட்ல பொண்ணுகேட்டு கல்யாணம் பண்ணிவைங்க என்று.

சப்பையா இதை எதிர்பார்க்கவில்லை .

அவருக்கும் இவனது விசயம் அரசல்புரசலாக தெரியும் என்றாலும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பான் என்று நினைக்கவில்லை. வயசுக்கோளாறு சரியாகிடுவான் என்றுதான் நினைத்திருந்தார்.

இரண்டு நாள் கழித்து தர்ஷானவை பார்க்க அவள் வீட்டுப்பக்கம் செல்ல அவளைக் காணவில்லை.

மெதுவாக நண்பர்கள் உதவியுடன் அளின் தமையன்களிடம் விசாரிக்க அவள் அவங்க சொந்தக்காரங்க வீட்டிற்கு சென்றதாக தகவல் வர யோசித்தவன். அப்பா எதுவும் அவங்ககிட்ட பேசிருப்பாங்களோ என சந்தேகித்தான்.

அவனுக்குமே போலிஸ் ட்ரைனிங்க் கடிதம் வர வேறு வழியின்றி எதையும் விசாரிக்காமல் வந்துவிட்டான்.

வேலைக்கிடைத்து எல்லாம் முடித்து வருவதற்குள் அவளது மொத்தக் குடும்பமும் இங்கில்லை எனத்தெரிந்து

நொந்துப்போனான்.

அப்படியே விட்டிருந்தால் கூட அவள் எங்காயவது சந்தோசமாக இல்லாவிட்டாலும் நிம்மதியா குறிப்பா உயிரோடவாவது இருந்திருப்பா.

சரவணனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது. இப்போது பேல அந்தக்காலத்தில் போனும் இல்லை குறுந்தகவல் அனுப்ப செல்போனும் இல்லை.

எங்கு சென்று தேடுவதற்கு ,இந்த மாநகரத்துல, எங்கபோயி தேடமுடியும்.

தனது நண்பர்களிடம் சொல்லி தகவல் திரட்ட சொல்லியிருந்தான்.

அவனுமே போலிஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தாலும் எந்த குறிப்பும் இல்லாமல் தேடமுடியவில்லை.

இப்படியாக ஒரு மூன்று மாதம் கழித்து அவனுக்கு தகவல் வந்தது. தர்ஷனாவின் குடும்பம் மும்பையிலிருந்து புறநாகர் பகுதியான தானே பகுதிக்கு அவர்களது சொந்தங்களுடன் இருக்கிறார்கள் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு திருமணம் என்றும்.

அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்கு. என்ன விட்டு எப்படி இன்னோருத்தனைக் கல்யாணம் செய்ய சம்மதிக்கலாம் என்று.

ஒரு நாள் பொருத்திருந்தவன் கல்யாணத்திற்கு முந்தின நாள் தன் நண்பர்களுடன் சென்று அவளைக் கடத்தி வந்துவிட்டான்.

தெரிந்த நண்பனின் வீட்டில் அவர்களுக்கு பணம் கொடுத்து அங்கே அவளுடன் தங்கியிருந்தான்.

தர்ஷனா சரவணனிடம் பேச முயல அவன் அவளைத் தவிர்த்தான் இன்னும் கோபம் போகவில்லை.

இப்படியாக அங்கயே உண்டு உறங்கி இரண்டு நாட்கள் சென்று தனது தகப்பனின் முன் சென்று நின்றான் எங்களுக்கு கல்யாணம் பண்ணிவைங்க

என்று.

பணம் வசதி இப்பதால் இரண்டே நாட்களில் அவர்கள் இருந்த ஏரியாவின் ஒரு பெரிய கோவிலில் வைத்து திருமணத்தினை நடத்தினர்

பெரியளவில்.

சுப்பையா பாண்டியன்- ராசாத்தியின் குடும்பத்தில இப்படியாக மருகளாக உள்ளே வந்திருந்தாள் தர்ஷனா.

நாயகி கல்யாண ஏற்பாடு நடக்கும்போதே வந்து ஒரு ஆட்டம் ஆடிச்சென்றார் சுப்பையாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் முகத்திருப்பல் இல்லை. இதற்கெல்லாம் சேர்த்து ராசாத்தி அவளை நன்றாக கவனித்து கொண்டார்.

அவனது கோபம் இன்னும் தணியவில்லை. அவளிடம் முகம் கொடுத்து பேசவும்இல்லை தர்ஷனாவுக்கு வருத்தம் நான் என்ன தப்பு செய்தேன் என்ற சிந்தனையிலயே இருந்தாள்.

பின்னாட்களில் அவனின் அன்பைக் கண்டு பயப்படத்தான் செய்தால்.

அத்தியாயம்-14

திருமணம் முடிந்த அன்றிரவு சரவணன் மாடியில் இருக்கவும் தர்ஷனாவை மெதுவாக மேல அனுப்பி வைத்தனர்.

அழாகன மெல்லிய சேலை உடுத்தி மெதுவாக மேல வரவும் சரவணன் அவளைத்தான் பார்த்திருந்தான்

காதலிக்கும் போது இருந்த வயதைவிட ஆறுமாதம் மட்டுமே கடந்திருந்தது திருமணம் முடியும் போது இரண்டுபேருக்குமே பக்குவம் இருந்ததா எனக்கேட்டால் யாருக்குமே சொல்லத்தெரியாது.

அவளை பிடித்து தன் அருகே அமர்த்திக் கொண்டான். சிறிது நேரம் அமைதியாக அவளைத்தான் பார்த்திருந்தான்.

அவன் கிட்டதட்ட ஐந்து நாட்கள் கடந்திருந்தாலும் அவளிடம் பாராமுகத்தை காட்டியவன் .

இன்று அவளை பார்த்ததும் அவளுக்கு கண்ணீர் இங்கு அவனை நம்பித்தானே வந்தாள். அவனே இப்படி வதைத்தாள் எப்படி என.

தன் காதலித்த பெண்ணை அப்படி உரிமையாக காணவும் அவனின் கட்டுப்பாடுகள் தளர்ந்தன. ஆனால் முழுதாக போகவில்லை. அவன் மனதில் விஷ விதையாக விழுந்ததை அறியாமல் அவளிடம் ஒன்றினான்.

நான் வந்து உன்ன தூக்கிட்டு வரலன்னா. உங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளையத்தான உன்ன கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு போயிருப்பான். நீயும் அதுக்கு சம்மதம் சொல்லிருக்க.

அப்போ நான் இல்லன்னா உனக்கு இனனொருத்தன் அப்படித்தான. நான்தான் நீ இல்லைனா வாழ்க்கையே இல்லனு உன்ன உயிரா நினைச்சிருக்கேன்.

நீ என்ன சும்மா நேரப்போக்கிற்கு காதலிச்சிருக்க. சந்தர்ப்பம் கிடைச்சதும்

வாய்ப்பாக பயன்படுத்திட்ட.உங்க ---

புத்திய காமிச்சிட்டயில்ல.

என்னோட பிரண்ட்ஸ் சொன்னாங்க நம்ம தமிழ் பிள்ளைனா பரவாயில்லை இந்த மராத்திகாரியலே இப்படித்தான்

நல்ல தேச்சிட்டு போயிடுவாளுகன்னு

சொன்னானுங்க. நான்தான் உன்மேல உள்ள பைத்தியத்துல கேட்காம போயிட்டேன். என வாயில வந்தத சொல்லி காயப்படுத்திட்டு இருந்தான்.

அவள் தன் கையால் வாயை இருக மூடி அழுதாள்.

அவள் அழவும் அவனுக்கு பாவமாக இருந்தது. அவளை இன்னும் தன் பக்கமா சேர்த்து இழுத்துக்கொண்டான்.

இன்னும் அழவும். ஏன் என்ன விட்டுட்டு போனா. எங்க இருக்க என தகவலாவது சொல்லிருக்கலாம்லா..

தர்ஷனா இப்போது அழுகைனூடே பேச ஆரம்பித்திருந்தாள் " கண்பதி முடிஞ்சி உங்கப்பா எங்கப்பாகிட்ட வந்து பேசினாங்க. அடுத்த நாளே அப்பா என்ன அம்மாச்சி வீட்ல கொண்டு விட்டுடாங்க. அங்க இருந்த நான் எப்படி தகவல் சொல்ல முடியும். அப்புறம் பார்த்தா மொத்த குடும்பமும் அங்க வந்திட்டாங்க.

உங்களுக்கு தகவல் சொல்ல நீங்க இல்லை. உங்க வீட்ல சொன்னாலும் கண்டிப்பா அந்த தகவல் உங்ககிட்ட வராது என எனக்கு தெரியும்.

நீங்க வருவீங்கனு பார்த்தா வரல. கல்யாண ஏற்பாடு எனக்குத் தெரியாது

தெரிஞ்ச அடுத்த நாளே உங்களுக்கு நான்தான் இங்க இருந்த ஒரு தெரிஞ்சவங்க மூலமா உங்க நண்பர்கள் கிட்ட சொல்ல சொன்னேன்.

அந்த கல்யாணம் பிடிச்சிருந்தா ஏன் உங்கள எதிர்பார்த்து காத்திருக்க போறேன். உங்களத்தான தேடியிருந்தேன் வருவீங்கன்னு, எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க "

" நீங்க வந்த உடனே உங்களோடதான ஆசையா வந்தேன். நான் உங்கமேல உயிரையே வச்சிருக்கேன் இப்படி சொல்லிட்டீங்களே " கைகளை வைத்து தன் முகத்தை மூடி ஒரே அழுகை.

அவள் சொன்ன காரணங்கள் அப்போதைக்கு அவன் மனது சமன்பட போதுமானதாக இருந்ததே தவிர வாழ்நாளைக்கானதாக இல்லை. அடிமனது சிலவிசயங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளாது. அது சமயம் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் ,அவனும் அப்படியே.

மெதுவாக அவளது கையை விலக்கி கண்ணீரை தூடைத்து தர்ஷனாவை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன்.

அவளோட கைகளில் தன் கரம்கொண்டு கோர்த்து அவளது தோள்களில் தனது முகத்தை வைத்து அழுத்தி அவளது முகத்தை தனது மீசையை வைத்து குறுகுறுப்புக் காட்டவும் பெண்ணவள்

கூசிக்குருகி நெளிந்தாள் , இப்போது அவளது அழுகை காணாமல் போயிருந்தது.

கோபக்காரணங்கள் எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளிப்போயின.

அவளை தனது கைக்குள் வைத்து

அவளது மேனியில் தன் கரத்தினை கொண்டு ஆளுகை செய்தான்

பெண்ணவள் ரெம்பவும் பயந்தாள்.

அவனுக்கும் தெரியவில்லை பெண்ணுடலைக் எப்படிக் கையால வேண்டும் என்று.

அகோரப்பசியில் இருப்பவனுக்கு கிடைத்த விருந்தெப்படியோ அப்படி நடந்துகொண்டான். தன்னைவிட்டு போய்விட்டாள் என்று நினைத்தது இப்போது அவனது அருகில்,அவனது கைகளில்.

அவளது ஆடைகளை கழற்றவில்லை கிழித்திருந்தான். அவளுக்கு பயம் தாம்பத்தியம் என்ன என்று அரிச்சுவடியே தெரியாத பெண்ணவள்.

துடித்துப் போனாள் கண்ணீர் வந்தது.

கனவன் தன் காதலன் என எல்லா வலியையும் தாங்கிக் கொண்டாள்.

இரு நாட்களும் அவளுக்கு வேதனையாக செல்ல..அவள் சோர்ந்து அமர்வதைப் பார்த்துதான் கேட்டான் என்ன என்று வலியில் அழுது தீர்த்துவிட்டாள். அவனுக்குமே தெரியவில்லை என்ன செய்ய என்று.

இரண்டு நாள் கழித்து அவன் வேலை அந்த மாநிலத்தின் ஒரு சிறிய நகரத்தில். அதனால் அவளைக் கூட்டிச் செல்லாமல் அவன் மட்டும் சென்றான்.

அடுத்த வாரம் அவன் வரும்போது அவனருகில் செல்ல சிறிது பயந்தாள்.

இரண்டுநாள் பழக்கத்தில் இப்போது சிறிது நிதானம் வந்திருந்தது அவனுக்கு.

அவளை தெளிவுபடுத்தி தனக்கு தேவையானதை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

வாரத்திற்கு ஒரு முறை வருவான் அவன் வரும்போது அவனது முழுத்தேவையாக அவள் மட்டுமே இருந்தாள்.

சிறுபிள்ளைகள் என்று குடும்பத்தினரும் ஒன்றும் சொல்லுவதில்லை. அவளை வெளியே எங்கும் அழைத்து செல்லவில்லை ,இப்போது அவனுக்கும் அவளுக்கும் கிடைக்கும் அந்த ஒரு நாளில் மனதைவிட உடல்கள் அதிகமாக சங்கமித்தது.

தர்ஷனா இருக்கும் இடமே தெரியாது. சரவணன் இருந்தாலும் இல்லையென்றாலும் அதிர்ந்து பேசமாட்டாள் மாமனார் மாமியார் இருவருக்கும் நல்ல மரியாதைக் கொடுப்பவள். அவளிடம் குற்றம் கண்டுபிடிக்கவே நாயகி வருவார்.

ஆனாலும் ராசாத்தி நாயகியினை தர்ஷனாவிடம் நெருங்காமல் பார்த்துக்

கொள்வார் சாப்பாட்டு முறைகள்தான்

தர்ஷனாவால் முடியவில்லை. அவளது வீட்டில் அசைவம் என்பது பிள்ளைகளுக்காக எப்போதாவது இருக்கும். இங்கு அப்படியில்லை தினமும் அசைவம் இருக்கவேண்டும்.

சரவணன் அசைவம் நன்கு சாப்பிடுவான். அதனாலயே அதை சமைக்க கற்றுக்கொண்டாள். தர்ஷனா சமையல் நன்றாக செய்வாள் என்றாலும் இங்கு வேலைக்கு ஆள் இருப்பதால் அவளுக்கு வேலையில்லை.

சரவணன் வரும் அந்த ஒரு நாளுக்காகத்தான் காத்திருப்பாள்.

இப்படியாக நாட்கள் கடந்திருக்க தர்ஷனாவின் உடல்நிலையில் மாற்றம் அந்த மாற்றங்களை கண்டுபிடிக்கும் அளவிற்கு அவளுக்கு விவேகம் போதவில்லை பெரியவரான ராசாத்தி

கண்டுகொண்டார்.

அவன் வருவதற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எல்லாவித பரிசோதனையும் செய்து முடித்து உறுதிசெய்துவிட்டே வந்தனர்.

நாயகிக்கு ஏற்கனவே மூத்தது ஒரு பையன். இரண்டாவதும் இப்போது கர்ப்பமாக இருந்தாள் அதனால் அவளின் அம்மாவீட்டிற்கு வர இங்கு தர்ஷனாவின் நிலையறிந்து கோபம் வந்தது. நான் எங்கம்மா வீட்டிற்கு வரும்போது தான் தடையா இருக்கு என பிள்ளை பிறக்கும் முன்பே கரித்துக்கொட்ட ஆரம்பித்தாள்.

வார இறுதியில் வந்த சரவணன் விசயம் கேள்விப்பட்டு சந்தோசம் பட்டான்.

அவளை அழைத்துக் கொண்டு முதன் முதலாக கோவிலுக்கு சென்று வந்தான்.

ரெம்பா சந்தோசமாக இருந்தான். தர்ஷனா தாய்மையின் பூரிப்பு மற்றும் இங்குள்ள வசதி வாய்ப்புகள் எல்லாம் அவள் மேனியை இன்னும் மெருகேற்றியிருந்தது..

இருவரும் ஒன்றாக நடந்து சென்றாலே

அவ்வளவு வித்தியாசம் தெரியும். ஆனால் தர்ஷனாவிற்கு அவன்தான் ஹீரோ அவனது நடை உடை தோரணை என எல்லாவற்றையும் ஆராதிப்பவள்.

அவன்கூட நடந்துபோறதுகூட அவளுக்கு பிடிக்கும். கோவிலுக்கு சென்று திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.

சரவணனின் நண்பன் அவனைக் கண்டு நலம் விசாரித்து பேசும்போதே அவனது பார்வை தர்ஷனாவின் பக்கம் திரும்பியது. அவளிடமும் அவன் பேச அவளும் ஏதேச்சையாக பேசினாள்.

அவன் சென்றதும் சரவணனின் முகம் கோபத்தை காட்டியது " லூசா நீ அவன் பேசுனா நீ பேசுவியா. அவன் பார்வையே சரியில்ல "

தர்ஷனா " உங்க நண்பர்தானனு பேசினேன் "

சரவணன் " இனி அவனலாம் பார்த்த பேசாத . அவன் நல்லவன் கிடையாது "

தர்ஷனா " அப்போ நீங்க ஏன் அவங்ககூட பேசுறீங்க. நல்லவங்க இல்லன்னா பேசாதிங்க .அவங்ககூட சேராதிங்க " வெள்ளந்தியாக அவள் சொன்னாள் .

அவனுக்கு இதுக்குமேல அவக்கிட்ட என்னத்த சொல்ல என அமைதியாகிவிட்டான்.

அவளின் நிலை அவனை அமைதியாக்கியது. திரும்பவும் அதே பழைய நிலைதான் வாரத்திற்கு ஒரு முறை வந்து செல்வதுதான். அந்த ஒரு நாளிலும் மனைவியுடன் ஒன்றாக இருக்க முடிவதில்லை அவளின் சோர்வு அவளது உடல்நிலை என லேசாக சிந்திக்க தொடங்கினான்.

இப்படியாக ஒரு மூன்று மாதங்கள் கடந்திருக்க அவள் கொஞ்சம் தெளியவும் தர்ஷனாவிற்கு அவளது அம்மாவின் அருகாமை வேண்டும்போல இருக்க. அவளைக் காண வந்தவனிடம்

இதை சொல்லியும் விட்டாள்.

சரவணனின் மனம் கோபத்தில் கொதித்தது " ஓ..அதான பார்த்தேன் என்னடா இந்த பேச்சை இன்னும் எடுக்கலையேன்னு. நான் வேணும்னுதான என்கூட வந்த. உனக்கு

நானும் என்குடும்பமும் போதும்.உன் குடும்பத்துல இருந்து இங்க யாரும் வரக்கூடாது. நீயும் அங்க போகக்கூடாது "

தர்ஷனா பார்வையாலே அவனைக் கெஞ்சினால் அசைந்துக்கொடுத்தான் இல்லை. அவனின் கோபம் தாங்காது மெதுவாக கீழே இறங்கி சென்றவள் ராசாத்தியுடன் அமர்ந்து கொண்டாள் .

அவளின் முகம் சரியில்லை எனத்தெரிந்து அவளிடம் கேட்கவும் மனசு தாங்காமல் சொல்லியும் விட்டாள். சிறு பெண் விபரீதம் அறியாமல்.

இரவு உணவின் போது ராசாத்தி மகனிடம் கேட்டுவிட்டார். எல்லா பெண்பிள்ளைக்கும் இருக்கற ஆசைதான் இந்த நேரத்துல அம்மாவ பார்க்கனும் அம்மா கையால சாப்பிடனும் என. அவங்களுக்கும் தகவல் சொல்லுயா அவங்க வந்து பாக்கறதா இருந்தா பார்த்திட்டு போகட்டுமேயா என்று நேரடியாக அவனிடம் சொல்லிவிட்டார்.

அவன் ஒன்றுமே பேசாமல் சாப்பிட்டுக்கொண்டே தர்ஷனாவின் முகத்தைதான் ஏறிட்டு பார்த்தான். அவ்வளவுதான் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து மேலே சென்றுவிட்டான்.

தூங்குவதற்கு முன்பு அவளுக்கான பாலை குடித்துவிட்டு அவனுக்கு எடுத்த சென்று " மச்சான் பால் இந்தாங்க "

அவ்வளவுதான் தெரியும். பால் இருந்த பாத்திரம் எங்கபோச்சிது தெரியல அறையெல்லாம் பால் சிந்தியிருந்தது.

சரவணன் தட்டிவிட்டுட்டான். அவன் அவளது முடியை பிடித்து " நான் மத்தியானமே சொன்னேன்ல உங்க வீட்டுக்கு போக வேண்டாம்னு. யாரும் இங்க வரக்கூடாதுனு. அப்புறம் எதுக்கு எங்க அம்மகிட்ட போய் சொல்லிருக்க.

அப்போ நான் முக்கியமில்லையா "

அவள் வலியின் மிகுதியில் அழ அவளை விட்டவன். " போ போ உங்கம்மா என்னையவிட கலரா நல்ல அழகானவனா பார்த்து வேற கட்டிவைப்பா போ " என்று வார்த்தையால் வதம் செய்துவிட்டு படுத்துவிட்டான்.

அவளுக்கு என்ன தெரியும் குடும்பத்துக்குள்ள எது சொல்லனும் சொல்லாக்கூடாதுஎன்று.

எல்லாவற்றையும் சுத்தம் செய்யது அழுதுக்கொண்டே படுத்து எப்போ தூங்கினாள் என்று தெரியாது.

நல்ல தூக்கத்தில் அவள் வயிற்றின் மேல் மெதுவாக கையை வைத்து தடவிக்கொடுத்தான். அவள் திரும்பி பார்க்கவும் தன்னோடு தோளில் சாய்த்துக் கொண்டான். அவனுக்கே தெரியல ஏன் இவ்வளவு கோபம் வருது என்று. எந்த சூழ்நிலையும் கோபமோ வருத்தமோ, சந்தோசமோ அவனுக்கு அவள் மட்டுந்தான் வேண்டும்.

காலையில் எழும்பி அவன் கிளம்பிக்கொண்டிருக்க அவள் அவனுக்கு காபி கொண்டுவந்தாள்.

மெதுவாக அவளை பக்கத்தில் இருத்தி அவள் கன்னங்களை தடவி உங்கம்மாவ பார்க்கனும்னா தகவல் சொல்லிவிடு வந்து பார்த்துட்டு போகட்டும். இங்க வேணா வந்து இருக்க சொல்லு உன்ன பார்த்துக்க..

ஆனா நீ அங்க போகவேண்டாம் சரியா என்று சொல்லி கிளம்பி போய்விட்டான்.

அவள்தான் குழம்பி நின்றாள் என்ன செய்ய என்று. மறுபடியும் மாமியாரிடம்

சென்று சொல்ல அவர் சுப்பையா மூலம் தகவல் செல்லிவிட்டார்.

அடுத்தடுத்த நாட்கள் இப்படியே செல்ல அவளது வயிறும் நாட்கள்போல வளர்ந்துக்கொண்டிருந்தது இப்போது ஏழாவது மாதம். அவள் வயிற்றில் பிள்ளையின் அசைவு நன்றாக தெரிய ஆரம்பித்திருந்தது.

கீழே யாரோ விருந்தினர் வந்ததுபோல இருக்க சென்று பார்த்தாள் அவளது அம்மா ஓடிப்போயி கட்டிக்கொண்டு அழுதாள். அவளது சின்ன தம்பியும் வந்திருந்தான்.

தர்ஷனாவிற்கு அவ்வளவு சந்தோசம்

தம்பிக்கு வீட்ல சாப்பிட என்னென்ன இருக்கோ அதை அவனுக்கு கொடுத்தவள் தன் அறைக்கு இருவரையும் கூட்டிவந்து பேசிக்கொண்டிருந்தாள்.

தர்ஷனா " அப்பா எப்படி இருக்காங்க, தங்கச்சி எப்படி இருக்கா. அப்பாவுக்கு

என்மேல வருத்தமா இருக்கும் என்று நிறைய பேசினாள் "

அவங்கம்மா மடியில் படுத்துக் கொண்டாள்.

" அப்பாவுக்கு உன்மேல கோபம் அவருக்குத் தெரியாமதான் வந்திருக்கோம் " என சொல்லவும் வருத்தப்பட்டவள் அமைதியாக இருந்தாள்.

அவர்கள் கிளம்பவும் கொஞ்சம் பணம் எடுத்து அவளின் அம்மாவின் கையில் யாருக்கும் தெரியமலிருக்க தன் அறையில் வைத்துக் கொடுத்தாள்.

சரவணன் வரும் போதெல்லாம் அவள் தேவைக்கு என்று பணம் கொடுப்பான். இங்கு அவளுக்கென்று தனியாக தேவைகள் இல்லை. எதுவாகினும் அவன் வரும்போது வாங்கி வருவான். போடுற ட்ரஸ்லயிருந்து உள்ளாடை முதற்கொண்டு வாங்கிவருவான் அவளுக்கென்று . குடும்பத்தோடு இருந்தாலும் அவளது தேவைக்கு யாருக்கிட்டயும் போயி நிற்ககூடது என்பது அவனின் எண்ணம்.

அதில் எல்லாம் ஒரு குறைவும் வைக்கமாட்டான். அடிக்கடி மிருககுணம் எட்டிப்பார்க்கும் அதைதவிர்த்து அவன் நல்லவனே.

தன் மனைவியைத்தவிர வேறு எண்ணமற்றவன். அதுதான் அங்கு பிரச்சனையின் ஆணிவேர்.

அத்தியாயம்-15

தர்ஷனாவிற்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். அதற்குள்ளாக நாயகிக்கு இரண்டாவது பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது.

இதனால் அவளின் வளைகாப்பு விழா தள்ளிப்போயிற்று. ஒன்பதாம் மாதம் நடத்தலாம் என முடிவு செய்தனர்.

நாயகி பிரசவம் முடிந்து தாய்வீட்டில் இருக்கவும் ,தர்ஷனாவின் சுதந்திர நடமாட்டம் சிறிது தடைபட்டது.

நாயகி தன் இரண்டாவது மகனுக்கு தாய்மாமனின் பெயர் சேர்த்து சரவணபெருமாள் என பெயர் வைத்தார்

சரவணன் இருக்கும்போது தர்ஷனாவை ஒன்றும் சொல்லமாட்டார்.

அவன் போனதும் எதாவது தர்ஷனா மனசு வலிக்க பேசுவார். அதை அவள் கனவனிடம் சொன்னதே இல்லை ஒரு நாளோ இரண்டு நாளோதான வர்றாங்க. அந்த நேரத்துலயும் அவங்கள கஷ்டபடுத்தனுமா என எண்ணுவாள்.

ஒரு நாள் இப்படித்தான் நாயகி ஏதோ கஷ்டமான வார்த்தைகளை பேசிவிட்டு ஏதேச்சையாக பார்க்க அங்கு சரவணன் நின்றிருந்தான்.

தர்ஷனா ஒன்றுமே சொல்லாமல் மாடிக்கு போய்விட்டாள். அடுத்த நாளில் நாயகியின் கனவன் வந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். எல்லாம் சரவணனின் உபயம்.

சரவணன் வந்து அவளிடம்தான் சத்தம் போட்டான். அக்காகிட்ட சண்டை போட வேண்டாம் ஆனால் அநாவசியமா பேசும்போது பதில் பேசு திருப்பி பதில் சொல்றது தப்பில்லை. இங்க நீ சும்மா உட்கார்ந்து சாப்பிடல. இது உன் புருசன் வீடு. அதுலயும் பணம் கொடுக்குறேன் மாசம் மாசம் .

வசதி இருக்கோ இல்லையோ நம்ம குடுக்ககூடியது குடுத்திறனும்.

வீட்ல என்ன சாப்பிட்டாலும் அவன் வரும்போது அவளுக்கென்று வாங்கிவருவான். திங்குறாளோ தூரப்போடுறாளோ அவன் வாங்கிட்டு வர்றதுலதான் சந்தோசப்படுவா.

அடிக்கடி வயிற்றை தொட்டுப்பார்ப்பான்.

பிள்ளை அசையிறது அவனுக்கு ரெம்ப பிடிக்கும் கைய வச்சி பார்ப்பான்.

இப்படியாக வளைகாப்பு விழா நன்றாக நடந்தது. தர்ஷனா வீட்டிலிருந்து யாரும் வரவில்லை ,அவர்களை அழைக்கவும் இல்லை. இது சரவணன் குடும்பம் நடத்திய விழா.

அன்றிரவு அவன் அறைக்குள் நுழையவும் அவளுக்கு ஒரு மாதிரி வாடை வந்தது அது பிடிக்காமல வந்தி பண்ணினாள். என்ன என்று பார்க்க அது

சரவணனின் வாயிலிருந்து. தர்ஷனா கண்டுகொண்டாள் குடிச்சிருக்கீங்களா,

எவ்வளவு நாளா இந்த பழக்கம் என என்றும் எதிர்த்து கேள்வி கேட்காதவள் இன்று கேட்டு சண்டையும் போட்டாள்.

இல்லடா பிரண்ட்ஸ் கேட்டாங்க நானும் கொஞ்சமா சாப்பிட்டேன். இனி குடிக்கமாட்டேன் என சொல்லியும் அவள் அழுதுக் கொண்டிருக்கவும் போயி குழிச்சிட்டு வந்து படுத்தான். அவள் இந்த விசயத்தில சமாதானம் ஆகவில்லை.

இப்படியாக வளைகாப்பு எல்லாம் முடிந்து ஒரு இருபது நாளில் தர்ஷனாவிற்கு வலிவர அவளை மருத்துமனையில் சேர்த்து சரவணனுக்கும் தகவல் செல்லியிருந்தனர். தன் பிள்ளை பிறக்கும் முன்பாக சரியாக வந்து நின்றான். தன் மனைவியை பார்ப்பதற்கு.

அவன் வரும்போது தர்ஷனா பிரசவத்தின் இறுதிநிலையில் அவனால் பார்க்க முடியவில்லை என்று தவித்துப்போனான். உண்மையில் அவர்கள் வீட்டில் எல்லோரும் சரவணனைத்தான் பார்த்திருந்தனர்.

அவன் தாயின் மடியில் தலைவைத்து

கண்ணை மூடிக்கொண்டான். அவனால் அவள் இல்லாதிருப்பது ,அதிலும் அவள் வலி வேதனைப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவன் பிள்ளையின் அழுகுரல் கேட்டுத்தான் நிமிர்ந்து பார்த்தான்.

செவிலியின் கையில் அழகாக பூந்தூவாலையில் சுற்றபட்ட குட்டி தேவதை, அவன் கையில் வாங்கும்போது அவ்வளவு பூரிப்பு அவனுக்கு.

சுகப்பிரசவம் என்பதால் ராசாத்தியினால் கவனிக்க முடிந்தது. வேலைக்கும் ஆள் வைத்திருந்தான்.

ஒருமாதம் இருந்த லீவ் எல்லாம் எடுத்து மனைவி பிள்ளையோடு இருந்தான் அப்படி பார்த்துக்கொள்வான்...

பெண்பிள்ளை தன் மனைவியின் கலரிலும் உருவம் அப்படியே அவனின் உருவத்திலும் பிறந்திருந்தாள்.

தன் மகளின் பெயர் சூட்டுவிழா அவன்தான் பெயரை தேர்ந்தெடுத்தான் மோனல் என. விழாவை முடித்தே தன் பணிக்கு திரும்பினான்.

அவன் தன் வேலை பார்க்கும் இடத்தில் இருப்பதால் தன் தனிமையை போக்கிகொள்ள விளையாட்டாக ஆரம்பித்த பழக்கமான குடிப்பதை அதிகபடுத்தியிருந்தான்.

தன் மனைவியுடன் இருக்க முடியாத அந்த மூன்று மாதமும் அவனுக்கு மதுவே துணையாக இருந்தது.

தர்ஷனாவிற்கு இப்பொழுதெல்லாம் குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்ததால் வாரத்திற்கு ஒரு முறைவரும் கனவனை கவனிக்க முடியவில்லை.

அவன் அவளிடம் கேட்டிருந்தாள் இசைத்திருப்பாளோ என்னவோ. ஆனால் அவன் தன் தனிமையை அவளின் தேடலை தன் மனதிற்குள்ளாகவே வைத்துக் கொண்டான். தர்ஷனா கனவனை கண்டுக்கொள்ள ஆறுமாதகாலமாயிற்று. அதற்குள் அவன் மதுவின் பிடியில் சென்றிருந்தான் .

தினமும் குடிக்க ஆரம்பித்திருந்தான்.

இங்கு வரும்போது மட்டும் குடிக்காமல் இருந்தான்.

அன்று சரவணன் வந்ததும்தான் தர்ஷனா கவனித்தாள் அவன் கண்கள் எல்லாம் ஒரு மாதிரி இருந்தது.

ஆளே ஒரு வித்தியசமா பழைய உற்சாகமின்றி இருந்தான்.

ஆனால் பிள்ளையென்றால் உயிர் அவனுக்கு. வீட்டுக்கு வந்திட்டாலே திரும்பி வேலைக்கு போகுற வரைக்கும் அவன் கையிலதான் இருப்பா மோனல் .

அன்றிரவு பிள்ளை தூங்கவைத்து விட்டு மெதுவாக கணவனிடம் வரவும் ,அவன் ஏதோ சிந்தனையில் இருந்தான் " மச்சான் என்ன யோசனை எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் " தட்டிக்கூப்பிடவும் அவள் பக்கமாக திரும்பி " நீங்க இரண்டுபேரும் எங்கூடவே வர்றீங்களா அங்க வீடு வாடகைக்கு எடுக்குறேன் .

தர்ஷனாவுக்கு சந்தோசம் உடனே தலையாட்டிவிட்டாள் உங்ககூடவே வந்திருவோம் என.

அப்போதுதான் அவளை பார்த்தான் தாய்மை தந்த பூரிப்பு உடம்பு கொஞ்சமா வச்சி இன்னும் அழகா இருந்தாள். அவன் பார்வையை அறிந்தவள் தலைக்குனிந்துக் கொண்டாள்.

சரவணன் தான் அவள் முகத்தை தன் ஒற்றை விரல்கொண்டு நிமித்தியவன்

இன்னும் அவளருகில் நெருங்கி உட்கார்ந்தவன்.

இவ்வளவு நாள் ஏன்டி என்ன கவனிக்கமா இருந்த பிள்ளைவந்தா என்ன பார்க்கமாட்டியா. பாரு நான் எப்படி உனக்காக ஏங்கி மெலிஞ்சி போயிட்டேன் என தன் உடம்பை காமிக்க.

தர்ஷனா இப்போதான் உணர்ந்தாள் அவனை சாப்பிடச்சொல்லக்கூட மறந்திருந்தாள் நிறைய நாள்.

பாவமாக முழித்தாள் அவனும் வேற பேசவதை நிறுத்தி அவன் தேவையை அவளிடம் ரகசியமாக கூறி அவளை இன்னும் சிவக்கசெய்தவன் அதனை நிறைவேற்றிய பின்னே அவளைவிடுவித்தான். அவளும் இப்போது அவனை ரெம்பத்தேட ஆரம்பித்தாள்.

அடுத்தநாள் குடும்பத்தார் எல்லோரும் இருக்கும்போது சரவணன் பேசினான்

நான் என் பொண்டாட்டி பிள்ளைய என்னோட அழைச்சிட்டு போறேன் என சொல்லவும்.

ரசாத்திதான் " வேண்டாம்யா பிள்ளைக்கு ஆறுமாசந்தான் ஆகிருக்கு மருமக தனியா பார்த்துக்க முடியாது . ஒரு வயசு முடியட்டும் நீ கூட்டிட்டு போ இப்போ வேண்டாம் " என உறுதியாக மறுத்தார்.

" வீட்டின் முதல் பேரக்குழந்தை அதுவும் பெண் குழந்தை வீட்டின் மாகலெட்சுமி பிள்ளைய வேற எங்கயோ கூட்டிட்டுபோறேன்னு சொல்ற வேண்டாம். பேசாம நீ இங்க வேலைய மாத்திட்டு வரப்பாரு என் சுப்பையாவும் சொல்லிவிட்டார் "

கனவன் மனைவிக்கு இதுக்கு மேல பேசமுடியல இரண்டுபேருக்குமே மனசே சரியில்லை.

தர்ஷனா அறைக்குள் சென்று அழவே செய்தாள் அவளை சமாதானம் செய்துவிட்டு போனான்.

மோனலுக்கு ஒருவயதாகும் போதுதான் மோனலின் குடும்பம் மறுபடியும் அவர்கள் இருந்த ஏரியாவிற்கு குடிவந்தனர்.

மோனல் அங்கு அவள் அப்பா இல்லாத நேரமாக சென்று எதாவது தேவையா என விசாரித்து வருவாள். அது சரவணனுக்கு தெரியாது.

தெரிந்தாள் அவ்வளவுதான் தாய் தகப்பன் கஷ்டப்படும்போது தான் மட்டும் சுகபோகமாக இருந்தாள் மனசு கஷ்டபடத்தான் செய்யும். அதனால் தன் தம்பி தங்கைக்கு தேவையானதை வாங்கிக்கொடுப்பாள் பண உதவியும் செய்வாள்.

ராசாத்தி தர்ஷானா இரண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் புரிந்து விட்டுக்குடுத்து போவதால் அவள் தாய்வீட்டிற்கு போவது பிரச்சனையானதில்லை.

மோனலுக்கு இரண்டுவயது முடிந்த பிறகுதான்.ராஜபாண்டியனுக்கு திருமணம் நடந்தது அதிலிருந்து வீட்டில்

எப்பொதும் அமலிதுமலிதான்.

ராஜபாண்டியனின் மனைவி ரஞ்சிதா

கொஞ்சம் படிப்பும்,வசதியும் உண்டு. இதில் வேறு நகை, வரதட்சனை அதிகம் கொண்டு வந்ததால் தர்ஷனாவை மனுஷியாககூட மதிக்கமாட்டாள். அதற்காக மட்டுமல்ல தர்ஷனாவின் அழகு அவளுக்கு எரிச்சலை கொடுக்கும். மோனலையும் பிடிக்காது, ராஜபாண்டியன் வரைக்கும்

மோனல் என்றால் உயிர்தான்.

அதனாலோ என்னவோ ரஞ்சிதா வந்த நாளில் இருந்து தர்ஷனாவையும் மோனலையும் வெறுக்க ஆரம்பித்தாள்.

ராசாத்தி தர்ஷனாகிட்டதான் அதிக ஒட்டுதலாக இருப்பதாக தினமும் ராஜபாண்டிக்கிட்ட சண்டைபோடுவாள். எதாவது சபிச்சிட்டே இருப்பாள்.

ராஜபாண்டியின் திருமணம் முடித்த நாளில் இருந்து அந்த வீட்டில் சத்தம் அதிகமாக ஆரம்பித்திருந்தது.

ரஞ்சிதாவும் அவள் பங்கிற்கு ஒரு திரியை சரவணன் மனதில் கொழுத்திப்போட்டிருந்தாள்.

ஒரு நாள் இப்படியாக எல்லோரும் அமர்ந்திருக்கும் போது ரஞ்சிதா வெளியே இருந்து வரவும் ராஜபாண்டி சத்தமாக எல்லோர் முன்பாகவும் எங்கடி போயிட்டு வர்ற எனக்கேட்க.

ரஞ்சிதா சொன்னாள் அம்மாவீட்டிற்கு போனேன் என்று.

திரும்ப அவன் அவளை கேட்டான் எப்பவும் அம்மாவீட்டிற்கு போகனுமா ஏன் ஒருநாள் பார்க்கலனாலும் செத்துருவியா என வார்த்தைகளை விட்டான்.

ரஞ்சிதா பிடித்துக்கொண்டாள் " ஏன் உங்க மயினி மட்டும் காலையில சாயங்கலம் என ஒரு நாளைக்கு முப்பது நேரம் அவங்கம்மா வீட்டிற்கு போயிட்டு வர்றாங்க , நான் மட்டும் போகக்கூடாதா " என்று கேட்டுவிட்டாள்.

இதைக்கேட்டதும் சரவணனுக்கு உச்சிக்கு ஏறியது கோபம். அவன் தர்ஷனாவை முறைத்துப்பார்க்க நடுங்கிவிட்டாள்.

ராஜபாண்டி " உன்கிட்ட கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவேண்டியதுதான்.

மயினிய எதுக்கு பேசுற அவங்களும் நீயும் ஒன்னா "

ரஞ்சிதா " நான் என்ன அவங்கள மாதிரியா இருக்கேன் வெள்ளத்தோலுன்னா உடனே உங்க மயினி பக்கம் பேசறீங்க. ஏது அழகா இருந்தா எல்லா ஆம்பிளையும் மடக்கிரவாளுக போல என சண்டையத் தூண்டிவிட்டு அவளது அறைக்கு செல்ல முயல.

ரஞ்சிதாவின் வார்த்தைகள் சரவணனின் மனதிற்குள் இருந்த பிசாசை தூண்டிவிட்டிருந்தது,

அதற்குள்ளாக ஆத்திரத்தில் எழும்பி தர்ஷனாவை அடித்திருந்தான்.

அடிவாங்கியவள் தடுமாறி நிற்க மோனலும் அதைப்பார்த்து வீறிட்டு அழ வீடே களேபரமாக இருந்தது.

சரவணன் எல்லார் முன்பும் " நான் என் பொண்டாட்டி பிள்ளைய என்கூட அழைச்சிட்டு போறேன் இப்போ நாசிக்லதான் எனக்கு ட்ரான்ஸ்பர் ஆகிருக்கு ...

அங்க ஒரளவு பரவாயில்லை குவார்ட்டஸ் தந்திருக்காங்க. அடுத்தவாரம் வந்து எல்லாத்தையும் எடுத்திட்டு போறோம் என்று சடுதியில் முடிவெடுத்துவிட்டான்.

ஆத்திரத்தில் எடுக்குற மூடிவு என்றுமே விளைவைத்தான் தரும்.

உடனே தன் அறைக்குள் சென்றுவிட்டான். ராசாத்திதான் ஒன்னுமே கொண்டுவரலானாலும் மூத்தவ தங்கம் குணத்துலயும் பெரியங்கவளை மதிக்கறதுலயும்.

எல்லாம் கொண்டு வந்தும் ஒருத்தி தறுதலையா வந்திட்டா என அழுது புலம்பினார்.

ராஜபாண்டிக்கு ஒன்னும் ஓடவில்லை . பொண்டாட்டிய எப்படி மாத்த முடியும்னு யோசிச்சான். அது பிறவிக்குணம், நாய் வாலை நிமித்திரத்துக்கு சமம் மாறவே மாறது என அவனுக்கு தெரியவில்லை.

தர்ஷனா பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பயந்து பயந்து மேல சென்றாள். அவனது கோபம் தணியவில்லை கவிழ்ந்துப் படுத்திருந்தான். கட்டிலில் மோனலை விட்டு அப்பாவக் கூப்பிடு எனச்சொல்ல அதுவும் நல்லபிள்ளையாக தன் தகப்பனைத் தொட்டு தொட்டுக்கூப்பிட

இளகிப்போனான்.திரும்பி தன் மகளைத்தூக்கி தன் மீது போட்டுக்கொண்டான்.

அவளைத்திரும்பி பார்த்து உனக்கும் பிள்ளைக்கும் இப்போதைக்கு என்னென்ன தேவையோ எடுத்து வை இராத்திரி ட்ரயினுக்கு நாசிக் கிளம்பறோம் என கூறிவிட்டு மகளுடன் விளையாட ஆரம்பித்தான்.

அவனுக்கு இப்போதும் அவளின் வீட்டினர் எங்க பிரிச்சிக்கூட்டிட்டு போயிடுவாங்களா என்ற எண்ணம் இருக்கு. அதற்காகவே அவர்கள் வீட்டிற்கு செல்ல தடைவிதித்தான். இப்போது அவர்கள் அருகில் வரவும் பயந்தான்.

அதே போல அவளும் அங்கு செல்கிறாள்

என ரஞ்சிதா சொல்லித்தான் தெரிந்துக்கொண்டான்.

மனைவி தன்னிடம் பொய் சொல்றா எல்லாத்தையும் மறைக்கின்றாள் எனும்போது அவனின் நம்பிக்கை அங்கே அடிப்பட்டு போகிறதல்லவா.

இரவு கிளம்பி கீழே வரவும் ராசாத்தி கண்களில் கண்ணீர் பேத்தியை வேற பார்க்கமுடியாதே என ஏக்கம்.

உடனே ராஜபாண்டியை அழைத்த சுப்பையா நீயும் உன் மனைவியும் தனிக்குடித்தனம் போயிடுங்க. பெரியவன் தனியா போறமாதிரி நீங்களும் போயிடுங்க,எனக்கு என் மனைவியின் மன நிம்மதி முக்கியம். எப்பவும் சந்தைக்கடை மாதிரி வீடு சத்தமா இருக்கூடாது என தன் முடிவை சொல்லிவிட்டார்.

இரவு இரயில் ஏறி காலையில் நாசிக் போயி சேர்ந்தாச்சி. குவார்ட்ஸ்லதான்

அவனுக்கு இப்போ சிறு நிம்மதி மனைவியும் மகளும் தன்னுடன் என.

தர்ஷனாவிற்கும் சந்தோசம் கல்யாணம் முடிஞ்சி கிட்டதட்ட நாலு வருசமா அவன வாரத்திற்கு ஒரு முறைப்பார்த்த வாழ்க்கை மாறி ,கனவன் எப்போதும் கண்முன்னாடியே

எனும்போது .

லீவு போட்டு வீட்டிற்குத் தேவையானதை

சமையலுக்கு என எல்லாம் வாங்கியிருந்தான் அவர்களுக்கான தனி உலகம் அது.

தினமும் இரவு அவளின் அருகாமை அவளுடல் இரண்டும் வேண்டும் அவனுக்கு. அவளுக்கு பிடிக்குதா இல்லையா என்கின்ற கேள்விக்கே அவனது மனதில் இடமில்லை.

அவளுக்கு வேண்டாம் என்றாலும் அவனுக்காக இசைவாள். அவளது ஆதர்ஷ ஹீரோ அவனல்லவா பொருத்துக் கொள்வாள்.

வாழ்க்கையில் பிடித்தம் பிடித்தமின்மை என எதுவும் அவளுக்கென்றில்லை.

இப்போதுதான் இருபத்தோரு வயது.

வெளியே சென்றாள்கூட வேறு ஆண்களைப் பார்த்தாலோ அவர்களிடம் பேசினாலோ அன்றைக்கு இரவு வார்த்தையினால் வதைத்துவிடுவான்

அதையும் விட அன்றிரவு அவளிடம் அதீத நெருக்கத்தை காமிப்பான். நீ எனக்கு சொந்தமானவள் மட்டுமே என்று உணர்த்துகின்ற ரீதியில். தர்ஷனாதான் சோர்ந்து போவாள் உடலாலும் உள்ளத்தாலும்...